திருப்பூர் எஸ்.பியாக திஷா மிட்டல் பொறுப்பேற்பு

திருப்பூர்,ஆக.20:திருப்பூர் மாவட்டத்திற்கு புதிய எஸ்.பியாக திஷாமிட்டல் நேற்று பொறுப்பேற்றார். திருப்பூர் மாவட்ட போலீஸ் எல்லையில் 5 சரகங்களுக்கு உட்பட்டு 30க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளராக கயல்விழி இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசால் வெளியிட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான பணியிடமாற்ற அறிவிப்பில் திருப்பூர் எஸ்.பி கயல்விழி உளுந்தூர்பேட்டை சிறப்பு பட்டாலியன் பிரிவிற்கும், பெரம்பலூர் மாவட்ட எஸ்.பியாக இருந்த திஷாமிட்டல்  திருப்பூர் எஸ்.பியாகவும் பணிமாற்றம் செய்யப்பட்டனர். திருப்பூர் எஸ்.பியாக இருந்த கயல்விழி உளுந்தூர்பேட்டை சென்ற நிலையில் திருப்பூர் எஸ்.பியாக திஷா மிட்டல் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

Related Stories: