திருப்பூர்,ஆக.20: தனது மகளின் கொலை வழக்கை விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரியும்,தங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் செல்வராஜ் (59) என்பவர் தனது குடும்பத்துடன் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவகத்தில் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: திருப்பூர் கொங்கு மெயின் ரோடு செல்வலட்சுமி நகர் பகுதியில் வசித்து வருகிறேன். எனது இளைய மகள் பிரியா, கொங்கு மெயின் ரோடு பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவரை 10 வருடத்திற்கு முன் காதலித்து திருமணம் செய்தாள். அவர்களுக்கு 9 வயதில் மகளும், 12 வயதில் மகனும் உள்ளனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ரமேஷ்குமாரை பிரிந்து எனது மகள் பிரியா மற்றும் குழந்தைகள் எங்களுடன் இருந்து வந்தார்.