×

மது விற்ற 5 பேர் கைது

திருப்பூர், ஆக.20:திருப்பூர் சேடர்பாளையம் ரோடு, வஞ்சிபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள பெட்டிக் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து, திருமுருகன்பூண்டி போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் திடீர் சோதனை நடத்தி, புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த மொகமது சாலி (27), நாகராஜ் (32) ஆகியோரை கைது செய்து 52 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

 மேலும், காங்கயம் ரோடு, புஷ்பா ஜங்கசன், மங்கலம் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் பார்களில் மதுவிலக்கு போலீசார் சோதனை நடத்தி, சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட வரதராஜன் (34), குமார் (42), அருண்குமார் (24) ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 54 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED அமைச்சர் முன்னிலையில் பாஜவினர் 100 பேர்...