மாவட்டத்தில் பி.டி.ஓ.,க்கள் மாற்றம்

திருப்பூர், ஆக. 20: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 13 ஊராட்சி ஒன்றியத்தில், வட்டார ஊராட்சி, கிராம ஊராட்சி என, 26 பி.டி.ஓ.,க்கள் பணியாற்றி வருகின்றனர். அத்துடன், பி.டி.ஓ., மற்றும் துணை பி.டி.ஓ., நிலை அலுவலர், கலெக்டர் அலுவலகத்திலும் பணியில் உள்ளனர்.நிர்வாக நலன்கருதி, ஆறு பி.டி.ஓ.,க்கள் அதிரடியாக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். காங்கயம் பி.டி.ஓ.,(ஊராட்சி) மீனாட்சி, திருப்பூர் வட்டார பி.டி.ஓ.,வாக மாற்றப்பட்டுள்ளார். திருப்பூரில் இருந்த மகுடேஸ்வரி, காங்கயம் ஒன்றியத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். குடிமங்கலம் வட்டார பி.டி.ஓ., பியூலா எப்சிபாய், கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவு பி.டி.ஓ., வாக மாற்றப்பட்டுள்ளார். மருத்துவ விடுப்பில் சென்ற பாலசுப்ரமணியன், குடிமங்கலம் பி.டி.ஓ., வாக நியமிக்கப்பட்டுள்ளார்.

குண்டடம் வட்டார பி.டி.ஓ., பிரியா, வெள்ளகோவிலுக்கும், அங்கிருந்த அய்யாசாமி குண்டடத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பணியிடமாறுதல் செய்த பி.டி.ஓக்களிடமிருந்து எவ்வித, மேல்முறையீட்டையும் ஏற்க இயலாது. உடனடியாக, அந்தந்த இடங்களில் பொறுப்பேற்க வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் வர வாய்ப்பு இருப்பதால், அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வசதியாக, காலியாக இருந்த, தேர்தல் பிரிவு பி.டி.ஓ., பணியிடம் நிரப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: