×

பந்தலூரில் யானைகள் முற்றுகை

பந்தலூர், ஆக. 20:பந்தலூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் வருகை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். பந்தலூர் அருகே சேரம்பாடி கோரஞ்சால், சேரம்பாடி காப்பிக்காடு, கண்ணம்பள்ளி, எலியாஸ் கடை, அத்திக்குன்னு, தேவாலா டவர், மேங்கொரேஞ் தனியார் தேயிலை தோட்டத்தையொட்டிய வனப்பகுதிகளில் காட்டு யானைகள் தொடர்ந்து முற்றுகையிட்டு வருவதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். நேற்று முன்தினம் எலியாஸ் கடை பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் உலா வந்தனர்.

பந்தலூர் - சேரம்பாடி செல்லும் நெடுஞ்சாலையில் யானைகள் எப்போது வேண்டுமானாலும் குறுக்கிட கூடும் என்பதால்,வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். எனவே, சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பதோடு, வாகன ஓட்டிகள் நிதானமாக வாகனங்களை இயக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED மேட்டுப்பாளையம் வாக்குச்சாவடி மையத்தில் மேற்கு மண்டல ஐஜி நேரில் ஆய்வு