×

போதைப்பொருள் கடத்திய வாலிபர் கைது

பாலக்காடு, ஆக. 20: பாலக்காடு மாவட்ட போதைத்தடுப்பு பிரிவு போலீசார் பஸ் நிலையம் அருகே வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகபடும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது வாலிபர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரது பையை சோதனையிட்ட போது, ரூ.ஒரு லட்சம் மதிப்பில் மாத்திரை வடிவில் போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய சோதனையில் திருச்சூர் மாவட்டம் நவக்கோட்டைச் சேர்ந்த சனூப் (22), என தெரியவந்தது. மேலும் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.

Tags :
× RELATED குன்னூரில் குதிரை சாகசத்தில் ராணுவ வீரர்கள் அசத்தல்