×

முதியோர் உதவித்தொகை வழங்க கோரி மனு

ஊட்டி,  ஆக. 20: கோத்தகிரி தாலுகாவிற்குட்பட்ட பெட்டட்டி, அண்ணா நகர் பகுதிகளில்  வாழும் முதியோர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும் என  வலியுறுத்தி 25க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு  அளித்தனர். தமிழக அரசு வயதான மற்றும் ஆதரவற்றவர்களுக்கு தமிழக அரசின்  சார்பில் ரூ.1000 முதியோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

கோத்தகிரி தாலுகாவிற்குட்பட்ட பெட்டட்டி மற்றும்  அண்ணா நகர் பகுதிகளில் வாழும் பெரும்பாலான முதிேயாருக்கு உதவித்தொகை  கிடைக்காமல் பல ஆண்டாக கஷ்டப்பட்டு வந்துள்ளனர். இவர்கள் அன்றாட வாழ்க்கை  நடத்துவதற்கும், உணவிற்காகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில்,  தமிழ்நாடு சமூக நீதிக்கான அனைத்து தொழிலாளர் முன்னணி அமைப்பினர், முதியோர்  உதவித்தொகை கிடைக்காமல் கஷ்டப்பட்டு வரும் 25க்கும் மேற்பட்ட முதியோர்களை  மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அவர்கள், முதிேயார்  உதவித்தொகை வழங்க கோரி மாவட்ட கலெக்டரை சந்தித்து தனித்தனியாக மனு  அளித்தனர். உரிய விசாரணை மேற்கொண்டு உதவித்தொகை வழங்க நடவடிக்கை  எடுக்கப்படும் என கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED பவானி அருகே ஸ்கூட்டர் மீது பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி