கோவை, ஆக.20: மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் குறித்து மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை மத்திய அமைச்சகத்தின் துணை செயலாளர் கோவையில் நேற்று ஆய்வு செய்தார். கோவை மாநகராட்சி பிரதான அலுவலகம் கூட்டரங்கில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் குறித்து அலுவலர்களுடன் மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறையின் மத்திய அமைச்சக துணைச் செயலாளர் சர்பேஸ்வர் மஜி மாநகராட்சி துணை ஆணையர் பிரசன்னா ராமசாமி ஆகியோர் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. பின்னர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேமிப்பு கட்டமைப்பினை துணைச் செயலாளர் மற்றும் மாநகராட்சி துணை ஆணையர் ஆகியோர் பார்வையிட்டனர்.