பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

ஈரோடு, ஆக.20:  ஈரோடு பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் கடந்த 15ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி தாளாளர் பெரியசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார். கல்லூரி முதல்வர் சண்முகன் வரவேற்றார். இணைச் செயலாளர்கள் வசந்தி சத்யன் மற்றும் பரிமளா ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவின் இறுதியாக மரம் நடும் விழா நடைபெற்றது. கல்லூரியின் செய்தி மடலை தாளாளர் வெளியிட இணைச் செயலாளர்கள் பெற்றுக் கொண்டனர்.

Related Stories: