×

சேலம் அருகே வெவ்வேறு இடத்தில் ரயில் மோதி 2 பேர் பலி

சேலம், ஆக.20: சேலம் அருகே வெவ்வேறு இடத்தில் ரயில் மோதி, அடையாளம் தெரியாத 2 பேர் பலியாகினர்.சேலத்தை அடுத்துள்ள தின்னப்பட்டி ரயில்வே யார்டு பகுதியில், நேற்று மதியம் சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர், உடல் சிதைந்து சடலமாக இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த சேலம் ரயில்வே போலீசார், ஏட்டு கிருஷ்ணன் தலைமையில் சென்று, சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். அதில், தண்டவாளத்தை கடந்து சென்றபோது, அந்த நபர் ரயில் மோதி இறந்திருப்பது தெரியவந்தது. அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. அதுபற்றி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல், நாமக்கல் மாவட்டம் மோகனூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே, ரயில்வே தண்டவாளத்தை கடந்த சுமார் 55 வயது மதிக்கத்தக்க மூதாட்டி, ரயில் மோதி பலியானார். அவரது சடலத்தை ஏட்டு கிருஷ்ணன் தலைமையிலான சேலம் ரயில்வே போலீசார் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். இறந்த பெண் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. அதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED கணேசமூர்த்தி எம்பி மறைவு: ஈஸ்வரன் எம்எல்ஏ இரங்கல்