×

தம்மம்பட்டியில் இயற்கை வேளாண்மை விழிப்புணர்வு கூட்டம்

தம்மம்பட்டி, ஆக.20: தம்மம்பட்டி பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் இயற்கை வழி வேளாண்மை குறித்த விழிப்புணர்வு கூட்டம் தம்மம்பட்டி மக்கள் குழு சார்பில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட இயற்கை உழவர்கள் குழுவினர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் கேட்கும் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர். செயற்கை வழி வேளாண்மையால் ஏற்படும் தீமைகள் குறித்தும் இதனால் பாதிக்கப்படும் மண் வளம் மற்றும் செடிகளில் ஏற்படும் நோய் தாக்கம் குறித்தும் விளக்கி கூறினர். மேலும், மரங்களை நட்டு மழை பெறுவதற்கான வழிமுறைகள், மழை நீரை சேமித்து விவசாயத்தை பெருக்குவது குறித்தும் பேசினர். முன்னதாக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இயற்கை வழி வேளாண்மை
கருத்தரங்கத்தில் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags :
× RELATED மாநகராட்சி மேயர், கமிஷனர் வரிசையில் நின்று வாக்களிப்பு