இளம்பிள்ளை, ஆக. 20: மகுடஞ்சாவடியில், மேற்கு மாவட்ட திமுக இலக்கிய அணி மற்றும் முரசொலி அறக்கட்டளை சார்பில் அறிஞர் அண்ணாவின் 111வது பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவிலான பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டி மாவட்ட செயலாளர் சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது. சங்ககிரி, இடைப்பாடி, கொளத்தூர், தாரமங்கலம், இடங்கணசாலை, மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 20க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகளும், 7 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ- மாணவிகளும் இப்போட்டியில் கலந்து கொண்டனர். இதில் தேர்வு செய்யப்படுவோர் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.