ஆத்தூர், ஆக.20: ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று 60 வயது மதிக்கத்தக்க முதியவர் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து அவர் யார்? எந்த ஊர் என்பது பற்றி தெரியவில்லை. இதை தொடர்ந்து முதியவரின் சடலத்தை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ஆத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.