×

ஆட்டோ டிரைவர்கள் தகராறு: 2 பேர் கைது

நாமக்கல், ஆக.20: நாமக்கல் போலீஸ் ஸ்டேசன் முன்பும், துறையூர் சாலையிலும் இரண்டு ஆட்டோ ஸ்டாண்டுகள் உள்ளன. இங்கு பயணிகளை ஏற்றிச்செல்வது என்பது தொடர்பாக, ஆட்டோ டிரைவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று இந்த பிரச்னை தொடர்பாக  ஆட்டோ டிரைவர்கள் சதீஷ் (26), பிரபாகரன் (23) ஆகிய இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற நாமக்கல் எஸ்ஐ பூபதி மற்றும் போலீசார், தகராறில் ஈடுபட்ட சதீஷ் மற்றும் பிரபகாரனை கைது செய்தனர்.

Tags :
× RELATED சீர்வரிசை தட்டுகளுடன் வாக்களிக்க அழைப்பு