குமாரபாளையம்,ஆக.20: குமாரபாளையத்தில், தேமுதிக நகர செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் மணியண்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றது. செயலாளர் சிவசுப்ரமணியன் சிறப்புரையாற்றினார். நகர துணைச்செயலாளர்கள் மகாலிங்கம், ராஜ், மாவட்ட பிரதிநிதிகள் ரவிக்குமார், மோகன் மற்றும் வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வரும் 25ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி, புதிய அலுவலகத்தை திறந்து வைத்து, நகர் முழுவதும் கொடியேற்றி கொண்டாடுவது. அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு பால், பழங்கள், வழங்குவது என்பன உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.