×

வங்கி மேலாளர்கள் ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரி, ஆக.20: கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள முன்னோடி வங்கியில், இந்தியன் வங்கி அனைத்து கிளை மேலாளர்களுடனான ஆலோசனை கூட்டம் 2 நாட்கள் நடந்தது. கூட்டத்திற்கு இந்தியன் வங்கி தலைமை அலுவலக பொதுமேலாளர் தேவராஜ் தலைமை வகித்தார். மண்டல மேலாளர் திருமாவளவன், வங்கி கிளை மேலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கி பேசினர். அப்போது, வங்கி தொடர்பான பல்வேறு பிரச்னைகள், வங்கிகளில் முன்னோடி திட்டங்களை செம்மையாக செயல்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது. மேலும், இந்தியாவின் 5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்க, வங்கியின் உயர் அதிகாரிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வங்கி கிளை மேலாளர்களுடன் ஆலோசனை நடத்தவும், வங்கி கிளைகளின் வர்த்தகத்தை பாதிக்கக்கூடிய முக்கிய பிரச்னைகள், வாடிக்கையாளர்களின் தேவைகள், உள்ளூர் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளித்தல், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கடன் அளிப்பது, முத்ரா கடன் 59 நிமிடங்களில் வழங்குவது, பிஎஸ்பி கடன் அளிப்பது, விவசாயிகளுக்கு முன்னுரிமை கடன் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்படுகள் குறித்த ஆலோசனை நடத்தப்பட்டது.

Tags :
× RELATED விழிப்புணர்வு பிரசாரம்