×

நாகோஜனஅள்ளியில் மரக்கன்று நடும் விழா

போச்சம்பள்ளி,  ஆக.20: காவேரிப்பட்டணம் ஒன்றியம், நாகோஜனஅள்ளி பேரூராட்சியில், ஜல்சக்தி  அபியான் திட்டத்தின் கீழ், சுதந்திர தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா  நடைபெற்றது. விழாவிற்கு பேரூராட்சி செயல் அலுவலர் நாகராஜன் தலைமை வகித்து,  மரக்கன்றுகளை நட்டார். கிராம நிர்வாக அலுவலர் ராஜா, இளநிலை உதவியாளர்  சாவித்திரி, ஓய்வு பெற்ற உதவி அலுவலர் சிதம்பரம், செண்பகபாண்டியன் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர். பேரூராட்சி செயல் அலுவலர் நாகராஜன் கூறுகையில், ‘ நாகோஜனஅள்ளி பேரூராட்சியில் ஜல்சக்தி அபியன் திட்டத்தில் கீழ் 10 ஆயிரம்  மரக்கன்றுகள் நடப்படுகிறது. முதற்கட்டமாக 2 ஆயிரம் செடிகள் நடப்பட்டு  உள்ளது. மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க  வேண்டும்,’ என்றார்.

Tags :
× RELATED விழிப்புணர்வு பிரசாரம்