×

பாரத் இண்டர்நேஷனல் பள்ளியில் அறிவுத்திறன் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு

கிருஷ்ணகிரி, ஆக.20: கிருஷ்ணகிரி-சென்னை சாலையில் இயங்கி வரும் பாரத் இண்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளியில் அறிவுத்திறன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவில் பள்ளி நிறுவனர் மணி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கிருஷ்ணகிரி கலெக்டர் பிரபாகர், எஸ்பி பண்டிகங்காதர், சிஇஓ மகேஸ்வரி,  வித்யாமந்திர் கல்வி நிறுவன தலைவர் சந்திரசேகர், பாரத் கல்விகுழுமங்களின் தாளாளர் கிருஷ்ணவேணி மணி ஆகியோர் கலந்து கொண்டனர். கலெக்டர் பிரபாகர் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். அறிவுத்திறன் போட்டியில் 600க்கும் மேற்பட்டவருக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. விழாவில், அனைத்து பள்ளி மாணவர்களும் போட்டித் தேர்வினை எதிர்கொள்ளும் வகையில் பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் பாரத் இண்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளி முதுகலை ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்ட நீட் தேர்வு புத்தகம், கலெக்டர் முன்னிலையில் வெளியிடப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி இயக்குநர் சந்தோஷ், முதல்வர் நரேந்திரநாத்ரெட்டி, ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர்.

Tags :
× RELATED சூதாடிய 3 பேர் கைது