×

இளம்பெண் தற்கொலை

தர்மபுரி, ஆக.20: காரிமங்கலம் அனுமந்தபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவரது மனைவி மாதேஸ்வரி (20). இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை வருடம் ஆகிறது. 4 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஆடி 18க்கு, விழுப்புரத்தில் உள்ள தந்தை வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு மாதேஸ்வரி கணவரிடம் கேட்டுள்ளார். ஆனால் ராஜேஷ்குமார் மறுப்பு தெரிவித்ததால் கணவன்,  மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோல், நேற்று முன்தினமும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட மாதேஸ்வரி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில், காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா