×

கழிவுநீர் தேக்கத்தால் தொற்று நோய் அபாயம்

பாப்பிரெட்டிப்பட்டி, ஆக.20: பாப்பிரெட்டிப்பட்டி அருகே தென்கரைகோட்டையில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் கிளை நூலகம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் முன் சாக்கடை கால்வாய் செல்கிறது. இந்த சாக்கடையை கடந்த சில மாதங்களாக தூர்வாராததால், கழிவுகள் தேங்கி கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் இதில் புழுக்கள் உற்பத்தியாகி, குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடுகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாக்கடையை தூர்வார கோரி, ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை விடுத்தும், நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து மெத்தன ேபாக்கு காட்டி வருகின்றனர். எனவே, சுகாதாரத்தை கருத்தில் கொண்டு சாக்கடை கால்வாயை தூர்வார, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா