×

பாப்பிரெட்டிப்பட்டியில் சிதிலமான நிழற்கூடத்தை சீரமைக்க வலியுறுத்தல்

பாப்பிரெட்டிப்பட்டி, ஆக.20:  பாப்பிரெட்டிப்பட்டியில், 25 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட சிதிலமடைந்த நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள தென்கரைகோட்டை பகுதியில், சுமார் 25 ஆண்டுகளுக்கு முன், பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்டது. இங்கிருந்து பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பாரப்பட்டி மற்றும் பல்வேறு பகுதிக்கு செல்லும் மக்கள் நிழற்கூடத்தை பயன்படுத்தி வந்தனர். தற்போது, இந்த நிழற்கூடம் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதில், சிமெண்ட் பூச்சு பெயர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. மேலும், மாலை நேரங்களில் மது அருந்தும் கூடமாக மாறியுள்ளது. இதனால் பயணிகள் இந்த நிழற்கூடத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, சிதிலமடைந்து காணப்படும் இந்த நிழற்கூடத்தை, பயணிகள் நலன் கருதி உடனடியாக மாவட்ட நிர்வாகம் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா