×

நார்த்தம்பட்டியில் வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற மக்கள் வலியுறுத்தல்

தர்மபுரி, ஆக.20:  தர்மபுரி அருகே நார்த்தம்பட்டியில் வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி அருகே நார்த்தம்பட்டி கிராமத்தில் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளி அருகே மேட்ச் பேக்டரி நிழற்கூடம் உள்ளது. இந்த நிழற்கூடத்தை ஒட்டியபடி மண்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை அந்த பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஒருவர் வழிப்பாதையை ஆக்கிரமித்து, கடை நடத்தி வருகிறார். இந்த கடையினால் பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சாலையில் குறுக்கே கடை உள்ளதால், வாகனங்கள் சென்று திரும்புவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இது தொடர்பாக, கலெக்டரிடம் பலமுறை மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பொதுமக்களுக்கு இடையூறாக வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்பு கடையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா