×

புள்ளலூர் கிராமத்தில் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் பரபரப்பு புகார்

காஞ்சிபுரம், ஆக.20: காஞ்சிபுரத்தை அடுத்த புள்ளலூர் கிராம மக்கள் கலெக்டர் பொன்னையாவிடம், அளித்த மனுவில் கூறியிருப்பதாவது. காஞ்சிபுரம் மாவட்டம், புள்ளலூர் ஊராட்சியில் ஏரி உள்வாய், நீர்நிலை புறம்போக்குகள் சுமார் 200 ஏக்கருக்கு மேல் உள்ளது. இந்த இடத்தை படுநெல்லி, புள்ளலூர், மூலப்பட்டு, ரங்கநாதபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சிலர், ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மேலும், 80 ஏக்கர் மேய்க்கால் நிலம் தண்டலம், பள்ளம்பாக்கம், புள்ளலூரை சேர்ந்த சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த நிலப்பகுதிகளில் நூறுநாள் வேலை செய்ய முயற்சி செய்தால் ஆக்கிரமிப்பாளர்கள் செய்யவிடாமல் தடுக்கின்றனர்.

மேய்க்கால் நிலங்களில் ஆடு, மாடுகள் மேய்க்கக் கூட அனுமதிக்காமல் விரட்டுகின்றனர். மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் வெளியூர் ஆட்கள் இரவோடு இரவாக லாரிகளில் மணல் கொள்ளையடித்து செல்கின்றனர். எனவே, புள்ளலூர் ஊராட்சியில் ஆக்கிமிப்பு செய்யப்பட்டுள்ள மேய்க்கால், ஏரி உள்வாய் மற்றும் நீர்நிலை புறம்போக்கு நிலங்களை மீட்டு, அளவீடு செய்ய வேண்டும். அந்த பகுதிகளுக்கு வேலி அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஊராட்சி வசம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...