×

முத்துப்பேட்டை அடுத்த சித்தமல்லியில் அரசு மருத்துவமனை கட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள ஒரு ஏக்கர் இடம் தானம் ஏகேஎஸ்.விஜயன் குடும்பத்தினர் வழங்கினர்

முத்துப்பேட்டை, ஆக.20: திருவாரூர்மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த சித்தமல்லி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதில்அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தியும், புதிய கட்டிடங்கள் கட்டி விரிவாக்கம் செய்தும் தரவேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து சுகாதார துறையினர்ரூபாய் 2கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்து பணியை துவங்க முடிவு செய்தது. இதில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை விரிவுப்படுத்தி மேம்படுத்த போதிய இடம் இல்லாமல் இருந்து வந்தநிலையில் அரசு மருத்துவமனை கட்ட தற்பொழுது உள்ள அரசு மருத்துவமனையின் எதிரே உள்ள நாகை முன்னாள் எம்பியும் திமுக மாநில விவசாய அணி செயலாளருமான ஏகேஎஸ்.விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினரின் பூர்வீக சொத்தான சுமார் 40லட்சம் மதிப்புள்ள 1ஏக்கர்இடத்தை தானமாக வழங்க குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி.

 முறையாக இடத்தை பத்திரப்பதிவு செய்து தனமாக கொடுக்க முத்துப்பேட்டை சார்பதிவாளர்அலுவலகத்திற்கு ஏகேஎஸ்.விஜயனின் தந்தையான முன்னாள் திமுக எம்எல்ஏ ஏ.கே.சுப்பையாவின் வாரிசுகளான மனைவி சுப்பம்மாள், மகள்கள் கல்பனா, யமுனா, மகன்கள் கார்மேகம், விஜயன் ஆகியோர் நேற்று வந்தனர். அங்கு பத்திரப்பதிவு நடைபெற்றது. பின்னர்தானமாக வழங்கிய இடத்திற்கான பத்திரத்தை ஏகேஎஸ்.விஜயன் குடும்பத்தினர்மாவட்ட சுகாதார துறை துணை இயக்குநர்ஸ்டேலின் மைக்கலிடம் வழங்கினர்.
அப்போது திமுக மாவட்ட துணைசெயலாளர்எம்.எஸ்.கார்த்திக் மற்றும் ஏகேஎஸ்.விஜயன் குடும்பத்தினர், உட்பட பலரும் உடன் இருந்தனர். அரசு மருத்துவமனை கட்ட இடம் தானமாக வழங்கிய திமுக முன்னாள் எம்பி ஏகேஎஸ்.விஜயன் குடும்பத்தினரை கிராம மக்கள் பாராட்டினர்.

Tags :
× RELATED முத்துப்பேட்டை அருகே தென்னங்கன்றுகளுக்கு தீ வைத்தவருக்கு கத்திக்குத்து