×

பாசன வாய்க்காலை தூர் வாரக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி, ஆக.20: திருத்துறைப்பூண்டியில் கஜா புயலால் ஆறுகளில் விழுந்த மரங்களை அகற்ற வேண்டும், பாசனவாய்க்கால்களை தூர் வார வேண்டும் என்பதைவலியுறுத்திஇந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள்சங்கம் சார்பில் நாகை சாலை பொதுப்பணித் துறை அலுவலகம் முன்பு கண்டனஆர்பாட்டம் நடைபெற்றது. முன்னாள்எம்.எல்.ஏஉலகநாதன் தலைமைவகித்தார், விவசாயசங்கஒன்றிய செயலாளர் ஜெயபால், நகர செயலாளர் சுந்தர் முன்னிலைவகித்தனர்..இதில் இத்தியகம்யூனிஸ்ட் கட்சிமாவட்ட துணைத் தலைவர் ஞானமோகன், மாவட்டநிர்வாக குழு சந்திரராமன், ஜோசப், மற்றும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள்கலந்து கொண்டனர். முன்னதாகசீனிவாசராவ் மணிமண்டபத்திலிருந்து விவசாயிகள்ஊர்வலமாக புறப்பட்டு நாகை சாலை பொதுப்பணித் துறை அலுவகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

Tags :
× RELATED தமிழகத்திற்கு பிரதமர் அடிக்கடி...