×

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

திருவாரூர், ஆக. 20:  பேரளம் அருகே உள்ள வெள்ளை அதம்பார் கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (60)..பிளாஸ்டிக் மற்றும் பாட்டில்களை சேகரித்து விற்பனை செய்து வந்த இவர் நேற்று முன்தினம் வெள்ளை அதம்பார் அருகே கந்தசாமி என்பவருக்கு சொந்தமான பம்பு செட் வயல் அருகே கிடந்த பாட்டில்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு கம்பி வேலி ஒன்றுக்குள் கிடந்த பாட்டில் ஒன்றினை எடுக்க முற்பட்டார். அப்போது அங்கு ஏற்கனவே அதில் மின்சாரம் பாய்ந்து இருந்ததால் தொழிலாளி ராஜமாணிக்கம் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். இது தொடர்பாக அவரது மகன் கணேசன் என்பவர் அளித்த புகாரின்பேரில் பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags :
× RELATED தமிழ்பல்கலை கழகத்தில்...