திருக்கனூர், ஆக. 20: குற்றச்சம்பவங்களை தடுக்கும் பொருட்டு கூனிச்சம்பட்டு மெயின்ரோட்டில் சிசிடிவி கேமரா பொருத்திய இளைஞர்களை பொதுமக்கள் பாராட்டினர். புதுவை மாநிலம் திருக்கனூர் பகுதியில் திருட்டு, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை தடுக்க மேற்கு எஸ்பி ரங்கநாதன் தலைமையில் திருக்கனூர் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப் இன்ஸ்பெக்டர் வேலு முன்னிலையில் பொதுமக்கள் நல்லுறவு கூட்டங்கள் நடத்தப்பட்டது. இதில் திருக்கனூர் பகுதியில் போலீஸ் பற்றாக்குறை இருப்பதால் அந்தந்த கிராமத்தில் உள்ள இளைஞர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் குற்றங்களை தடுக்கும் வகையில் தங்கள் பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.