புதுச்சேரி, ஆக. 20: புதுச்சேரி யூனியன் பிரதேச அனைத்து சென்டாக் மாணவர்கள் நலச்சங்க தலைவர் நாராயணசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்டாக் மருத்துவ கலந்தாய்வில் சாதி, குடியிருப்பு சான்றிதழ், பிராந்திய ஒதுக்கீடு ஆகியவற்றில் நடைபெற்ற தவறுகள் சுட்டிக்காட்டியுள்ளோம். அதனை சரி செய்யாமல் மாப்அப் கலந்தாய்வு நடத்தக் கூடாது. 2ம் கட்ட கலந்தாய்வு முடிவில் காலியாக உள்ள இடங்களை பொது, ஓபிசி, எம்பிசி, இபிசி, பிசிஎம், எஸ்சி, எஸ்டி அடிப்படையில் பிரித்து கலந்தாய்வு நடத்த வேண்டும். அல்லது புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் மாணவர்கள் பயன் பெறும் பொதுப்பிரிவாக அறிவித்து மாப்அப் கலந்தாய்வு நடத்த வேண்டும்.