×

சிதம்பரம் நகரில் மழைநீர் தேங்கியதால் நோய் பரவும் அபாயம்

சிதம்பரம், ஆக. 20:  சிதம்பரம் நகரில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் மக்கள் அவதியுறுகின்றனர். சிதம்பரம் பேருந்து நிலைய நுழைவு வாயில், காந்தி சிலை பேருந்து நிறுத்தம், தங்கரதசந்து உள்ளிட்ட பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சாலை ஓரங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் கொசுக்கள் அதிகரித்து டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகையால் நகராட்சி அதிகாரிகள் தண்ணீர் தேங்கும் இடங்களை பார்வையிட்டு தண்ணீர் தேங்காமல் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது