×

பட்டதாரி பெண் மாயம்

விருத்தாசலம், ஆக. 20: விருத்தாசலம் அடுத்த ஆலடி அருகே உள்ள பாலக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் மகள் கங்காகவுரி (19). இவர் பிஎஸ்சி பட்டப்படிப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 16ம் தேதியன்று வீட்டிலிருந்து வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றவர், அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், கங்காகவுரியின் தோழிகள் மற்றும் உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இந்நிலையில் மணிவண்ணனின் உறவினரான அதே பகுதியை சேர்ந்த கலியபெருமாள் மகன் சக்திவேல் (23) என்பவர் குஜராத்தில் பணிபுரிந்து வருவதாகவும், ஒரு வாரத்துக்கு முன்பு ஊருக்கு வந்துவிட்டு மீண்டும் குஜராத்துக்கு சென்றுள்ளதாகவும், அதனால் சக்திவேல், கங்காகவுரியை கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மணிவண்ணன் கொடுத்த புகாரின்படி, ஆலடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டதாரி இளம்பெண் மாயமான சம்பவம் அக்கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது