×

சாலை மறியலில் ஈடுபட்ட விசிக கட்சியினர் மீது வழக்கு

வேப்பூர், ஆக. 20: வேப்பூர் அருகே கீரம்பூர் கைகாட்டியில் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு விசிக கொடியை அக்கட்சி நிர்வாகி அருண்பாண்டியன் ஏற்றினார். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த மாற்று சமூகத்தை சேர்ந்த தர், தினேஷ், அப்பாசாமி, அன்புமணி, திவாகர் உள்ளிட்ட 5 பேர் அருண்பாண்டியன் வீட்டிற்கு சென்று அவரையும், அவரது தாய் கவிதாவையும் தாக்கினர். இதை கண்டித்து அவரது உறவினர்கள் மற்றும் விசிக நிர்வாகிகள் நேற்று முன்தினம் சாலை மறியல் செய்தனர். இதை தொடர்ந்து வேப்பூர் போலீசார் விருத்தாசலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அருண்பாண்டியன், அவரது தாய் கவிதா ஆகியோரை பார்வையிட்டனர். பின்னர் இதுகுறித்த புகாரின்பேரில் அருண்பாண்டியனை தாக்கிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து  அப்பாசாமி என்பவரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். மேலும் தலைமறைவான 4 பேரை தேடி வருகின்றனர்.இந்நிலையில் முன்னறிவிப்பின்றி சாலை மறியல் செய்த விசிக கடலூர்  மண்டல செயலாளர் திருமாறன், வழக்கறிஞர் காந்தி, மாவட்ட துணை செயலாளர் திராவிடமணி, நல்லூர் ஒன்றிய செயலாளர் சந்தோஷ், கீரம்பூரை சேர்ந்த துரைகண்ணு உள்ளிட்ட 52 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



Tags :
× RELATED வில்லியனூரில் முதியவரை ஏமாற்றி தாமரை...