×

அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர்,ஆக. 20: பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கடந்த 2003 ஆம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும். 240 நாட்கள் பணிபுரிந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊழியர்கள் ஓய்வு பெறும்போது அவர்களுக்கு உரிய பணப்பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் கடலூர் அரசு போக்குவரத்து பணிமனை முன் நேற்று காலை நடைபெற்றது.போக்குவரத்து கழக ஊழியர் சங்க தலைவர் ஜான் விக்டர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்க போராட்டம் நடத்தினர்.


Tags :
× RELATED புதுவை முழுவதும் 2வது நாளாக 150...