துவரங்குறிச்சி அருகே வாகனம் மோதி ஆட்டோ டிரைவர் பரிதாப பலி 2 பெண்கள் படுகாயம்

மணப்பாறை, ஆக.14: துவரங்குறிச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஆட்டோ டிரைவர் பலியானார். 2 பெண்கள் படுகாயமடைந்தனர். சிவகங்கை மாவட்டம் கல்லூரணியை சேர்ந்தவர் பரமசிவம்(57), ஆட்டோ டிரைவர். இவர் தனது ஆட்டோவில் 2 பெண் பயணிகளுடன் நேற்று விராலிமலையில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பியுள்ளார். திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை யாகபுரம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஆட்டோ அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோ டிரைவர் பரமசிவம் சம்பவ இடத்திலேயே பலியானார். ஆட்டோவின் பின்னால் அமர்ந்து இருந்த இரண்டு பெண் பயணிகள் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துவரங்குறிச்சி போலீசார் பரமசிவம் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த 2 ெபண்களையும் மீட்டு சிகிச்சைக்காக துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: