மாடியிலிருந்து தவறி விழுந்து முதியவர் பலி

திருச்சி, ஆக. 14: திருச்சி உறையூர் லிங்கநகரை சேர்ந்தவர் கலியராஜ்(61). மெடிக்கல் ஒன்றில் டெலிவரி வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை பால் வாங்குவதற்காக மாடியில் இருந்து கீழே இறங்கினார். அப்போது நிலை தடுமாறி தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்து உறையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், இவர் இரவில் தூங்குவதற்காக தூக்க மாத்திரை உபயோகித்து வந்ததாகவும் தெரிகிறது.

Related Stories: