மண்ணச்சநல்லூர், ஆக.14: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நேற்று உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் ஒரு கோடியே 90 ஆயிரத்து 523 ரூபாய் மற்றும் தங்கம், வெள்ளி நகைகள் கணக்கிடப்பட்டன. சக்தி வழிபாட்டு தலங்களில் முதன்மையாக விளங்கும் சமயபுரத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற மாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் மாதமிருமுறை எண்ணப்படுகின்றன. கோயில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் மொத்தம் 27 உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.