புகார்திருச்சி, ஆக.14: திருச்சி ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளான அழகுப்படுத்தும் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதாக ரயில் பயணிகள் புகார் தொிவித்து வருகின்றனர். திருச்சி ரயில் நிலையத்தில் நுழைவு வாயில் பகுதியில் புதுப்பிக்கும் பணிகள் கடந்த ஓரு வருடமாக நடந்து வருகிறது. ரயில் நிலையம் பராமரித்தல் மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு ரயில் பயணகளிடம் 2 சதவீதம் கூடுதல் கட்டண வசூல் செய்யப்படுகிறது. இந்த கூடுதல் கட்டணம் மூலமாக தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலைய நுழைவு வாயில் பகுதிகளில், பஸ், கார், ஆட்டோ, டூவிலர் உள்பட பல்வேறு வாகனங்கள் வந்து செல்ல வசதிகள் செய்கின்றனர். மேலும் நுழைவு வாயில் பகுதியில் புதிய நீரூற்று, புல் தரைகள் அமைத்து அழகுப்படுத்தும் பணிகளும் நடக்கிறது.