மணப்பாறை, ஆக.14: துவரங்குறிச்சி அருகே சத்துணவு அமைப்பாளரிடம் தங்கம் என நினைத்து கவரிங் செயினை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே தெத்தூரை சேர்ந்தவர் லட்சுமி. சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். லட்சுமி தினசரி வேலைக்கு செல்லும்போது தங்க செயினை அணிந்துகொண்டு செல்வதை மர்ம நபர்கள் சிலர் கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று தெற்கு தெத்தூரை நோக்கி டூவீலரில் சென்ற லட்சுமியை எதிரே பைக்கில் வந்த 3 பேர் வழிமறித்தனர். இதனால், லட்சுமி நிலை தடுமாறி டூவீலரிலிருந்து கீழே விழுந்தார். இதனையடுத்து, மர்ம நபர்கள் மூவரும் திடீரென லட்சுமி கழுத்தில் கிடந்த செயினை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்றுவிட்டனர்.