×

பி.இ படித்த வாலிபர் மாயம்

விருதுநகர், ஆக.14: விருதுநுகர் அருகே எட்டுநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஜெயம். இவருக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இளையமகன் இருளப்பன்(24) பிஇ சிவில் முடித்து சென்னையில் ஓராண்டு வேலை செய்துள்ளார். வேலை செய்த இடத்தில் விபத்தில் கால்முறிவு ஏற்பட்டு வீட்டில் இருந்துள்ளார்.

இந்நிலையில் இருளப்பனும் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில், யாரிடமும் பேசமால் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆக.7ம் தேதி அதிகாலை 3 மணி வரை வீட்டில் இருந்த இருளப்பன் திடீரென வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக சூலக்கரை போலீசில் தாய் தனம் அளித்த புகாரில் போலீசார் இருளப்பனை தேடிவருகின்றனர்.

Tags :
× RELATED செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சிக்கு...