×

வத்திராயிருப்பு பகுதியில் 10 நிமிடம் மட்டுமே பெய்த மழையால் விவசாயிகள் கவலை

வத்திராயிருப்பு, ஆக. 14: வத்திராயிருப்பில் 10 நிமிடம் மட்டுமே மழை பெய்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். தமிழகத்தில் நிலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்த பகுதிகளில் உள்ள ஆணைகள் நிரம்பி வருகின்றன.
ஆனால் விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியில் மட்டும் மழை பெய்யாமல் காலம் தாழ்த்தி வருதோடு, கடந்த பத்து நாட்களாக வெயில் கெளுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் பலத்த மழை பெய்வது போன்று கடும் மேகங்கள் சூழ்ந்த நிலையிலும், மதியம் 12.30 மணியளவில் வத்திராயிருப்பு பகுதியில் மட்டும் சுமார்10 நிமிடம் மட்டுமே மழை பெய்து நின்றுவிட்டது. இந்த மழை பலத்த மழையாக பெய்யும் என்று எதிர்பார்த்திருந்த விவசாயிகளும், பொது மக்களுக்கும் மழை பெய்யாததால் ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் வரும் நாட்களில் தொடர்ந்து மழை பெய்தால் மட்டுமே விவசாய பணிகளை தொடங்க முடியும் என்ற கவலையில விவசாயிகள் உள்ளனர்.

Tags :
× RELATED தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்...