×

வேன் மோதி போலீஸ்காரர் காயம்

திருவில்லிபுத்தூர், ஆக. 14: திருவில்லிபுத்தூர் அருகே வேன் மோதியதில் போலீஸ்காரர் காயமடைந்தார். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணியாற்றி வருபவர் செல்வக்குமார். இவர் நேற்றுமுன்தினம் மாலை டூவீலரில் ஆயுதப்படை முகாமிற்கு கூமாப்பட்டியில் இருந்து சென்றார். அப்போது ராஜபாளையத்தில் இருந்து அருப்புக்கோட்டை நோக்கி சென்ற வேன், டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த செல்வக்குமார் மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து திருவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...