×

பூச்சி கடித்ததால் முதியவர் தற்கொலை

தேனி, ஆக.14: தேனி அருகே பூச்சி கடித்து உடல் நிலை பாதிக்கப்பட்டதால் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தேனி அருகே கோட்டூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமசாமி(80). தனியாக வசித்து வந்த இவர், பூச்சி கடித்ததால் உடலில் அரிப்பு நோய் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார். இதற்கு சித்த மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் நோய் குணமாகவில்லை. இதனால் அவதிப்பட்ட இவர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED தாகம் தீர்க்கும் பானங்கள் தரமானதா?