×

செந்நாய் துரத்தியதில் மான் சாவு

வருசநாடு, ஆக.14: வருசநாடு அருகே மணலாற்று குடிசை கிராமத்தில் செந்நாய் துரத்தியதில் புள்ளிமான் பலியானது. இது குறித்து பொதுமக்கள் வருசநாடு வனச்சரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் அடிப்படையில் வருசநாடு வனச்சரகர் (பொறுப்பு) ஆறுமுகம், வனவர் பிரதீப், வனக்காப்பாளர் ரவி, கால்நடை மருத்துவர் மதுசூதனன், வனப்பணியாளர்கள் ஆகியோர் விரைந்து வந்து புள்ளிமானை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர். இதுகுறித்து வன அதிகாரிகளிடம் கேட்டதற்கு, மழை காலங்களில் செந்நாய் துரத்துவது வழக்கமான ஒன்று. நேற்று செந்நாய்கள் துரத்தி மணலாற்றுக் குடிசை ஊருக்குள் நுழைந்த புள்ளிமான் பலத்த காயத்துடன் பலியானது. இது ஆண் புள்ளிமான். சுமார் 3 வயது இருக்கும் என்றனர்.

Tags :
× RELATED கஞ்சாவுடன் சுற்றி திரிந்த வாலிபர் கைது