×

தும்பைப்பட்டியில் ஆடித்தபசு விழா

மேலூர், ஆக. 14: மேலூர் அருகே, தும்பைப்பட்டியில் உள்ள சங்கரநாராயண சுவாமி, கோமதியம்மன் கோயிலில் ஆடித்தபசு விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி கோமதி அம்மன், சங்கரலிங்க சுவாமி, சங்கரநாராயணர் சுவாமிகளுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம், மஞ்சள், பஞ்சகாவ்யம், பால், தயிர், இளநீர், கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம், பன்னீர், திருநீர் ஆகிய அபிஷேகங்கள் நடைபெற்றன. அதை தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜை மற்றும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மதுரை கிழக்கு தொகுதி எம்எல்ஏ மூர்த்தி கலந்து கொண்டார். விழாவிற்கு வந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நாராயணர் கோயில் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பலர் செய்திருந்தனர்.

Tags :
× RELATED உசிலம்பட்டி அருகே பள்ளத்தில் சரிந்த...