திருமங்கலம், ஆக. 14: உசிலம்பட்டி அருகே, வி.பாறைப்பட்டியை சேர்ந்த பாண்டியம்மாள் (45), இவர் அருகிலுள்ள தோட்டத்திற்கு புல் அறுக்கச் சென்றார். புல் கட்டை தூக்கிக் கொண்டு ராஜேந்திரன் என்பவரது தோட்டம் வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ராஜேந்திரன் மகன் செல்லப்பாண்டி (24), தோட்டத்தில் படித்து கொண்டிருந்தார். அவரை பார்த்த பாண்டியம்மாள் ‘என்ன தம்பி போலீஸ் தேர்வுக்கு போகவில்லையா’ என கேட்டுள்ளார்.