அலங்காநல்லூர், ஆக. 14: அழகர்கோவிலில் உள்ள சுந்தராஜப் பெருமாள் கோயிலில் நாளை ஆடித்தேரோட்டம் நடக்கிறது. அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர்கோயிலில் ஆடிபெருந்திருவிழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினசரி அன்னம், சிம்மம், அனுமார், கருடன், சேஷ மற்றும் யானை வாகனங்களில் கள்ளழகர் என்ற சுந்தரராஜப்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று இரவு குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.