வத்தலக்குண்டு, ஆக. 14: வத்தலக்குண்டு அருகே குன்னுவாரன்கோட்டையில் தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு அவசர கூட்டம் நடந்தது. மாநில பொதுச் செயலாளர் இளங்கோவன் தலைமை வகிக்க, பொருளாளர் சரவணன், சட்ட ஆலோசகர் பழனிக்குமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழகத்தில் கோவை, நீலகிரி போன்ற மாவட்டங்களில் கடுமையான மழைப்பொழிவு உள்ளது. அருகிலுள்ள கொடைக்கானலில் கூட மழை பெய்து வருகிறது. ஆனால் வத்தலக்குண்டு பகுதியில் மழையே இல்லாமல் விவசாய பணிகள் முடங்கி கிடக்கின்றன. காரணம் நீர்நிலைகள் அனைத்து வறண்டு கிடப்பதனால்தான்.