கெங்கவல்லியில் மாணவ-மாணவிகளுக்கு பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு

கெங்கவல்லி, ஆக.14: கெங்கவல்லி இரண்டாவது வார்டு ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

முகாமில் கெங்கவல்லி தீயணைப்பு நிலைய அலுவலர் பெரியசாமி தலைமை வகித்து, மாணவ -மாணவிகளிடையே விளக்கி பேசினார். மேலும், தீயணைப்பு மீட்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். இதில், மழைக்காலங்களில் மற்றும் பெரும் வெள்ளம் ஏற்படும்போது தன்னை எப்படி காப்பாற்றிக்கொள்வது; மற்றவர்களை எப்படி காப்பாற்றுவது போன்ற ஒத்திகை நிகழ்வுகள் செயல்முறையாக செய்து காண்பித்தனர். முகாமில், மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: