டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை

ஈரோடு, ஆக. 14:சுதந்திர தினத்தையொட்டி ஈரோடு மாவட்டத்தில் 15ம் தேதி (நாளை)  டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, மதுபான கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பார்கள் மற்றும் எப்எல் 2, எப்எல் 3 மதுபான விடுதிகள், ஓட்டல்களில் உள்ள பார்கள் மூடப்பட வேண்டும். அன்றைய தினம் மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்க வேண்டும் என கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

Related Stories: