சத்தியமங்கலம், ஆக.14: ஆற்று குடிநீர் வழங்க கோரி சமத்துவபுரம் கிராம மக்கள் மனு நேற்று கொடுத்தனர். சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிக்கரசம்பாளையம் ஊராட்சியில் உள்ள புதுவடவள்ளி சமத்துவபுர கிராம மக்களுக்கு ஆழ்குழாய் கிணறு மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த குடிநீர் இக்கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான செண்டுமல்லி பூவிலிருந்து வாசனை திரவியம் தயாரிக்கும் ஆலையின் கழிவுநீர் ஆழ்குழாய் கிணற்று நீரில் கலந்துள்ளதால் குடிப்பதற்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.