×

டிசிஎஸ்-ல் மவுண்ட் சீயோன் மாணவிகள் தேர்வு

புதுக்கோட்டை, ஆக.14: சமீபத்தில் டி.சி.எஸ் நடத்திய எழுத்துமுறை தேர்வில் மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை சார்ந்த 4 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.தேர்வு பெற்ற மாணவிகள்: எலக்ட்ரிக்கல்-எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங் இறுதியாண்டு மாணவிகள் நஸ்ரின் பானு, பிரதீபா ராஜீ, எலக்ட்ரானிக்ஸ் - கம்யூனிகேசன் இன்ஜினியரிங் இறுதியாண்டு மாணவி கீர்த்தனா, கம்ப்யூட்டர் சயின்ஸ் - இன்ஜினியரிங் இறுதியாண்டு மாணவி தனலெட்சுமி ஆகியோர் தேர்வு பெற்றனர்.

டி.சி.எஸ் நிறுவனத்தில் தேர்வு பெற்ற மாணவிகளை மவுண்ட் சீயோன் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜெயபாரதன் செல்லையா, துணைத் தலைவர் பிளாரன்ஸ் ஜெயபாரதன், கல்லூரி இயக்குநர் டாக்டர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபாரதன், கல்லூரி முதல்வர் டாக்டர் பாலமுருகன், கல்வி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் விவியன் ஜெயசன், கல்லூரி வேலைவாய்ப்பு அதிகாரி டாக்டர் ஜான் மற்றும் துறைத் தலைவர்கள் டாக்டர்.ராபின்சன், திவ்யபிரசாத் மற்றும் இளவரசி தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tags :
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த...